Friday, April 20, 2012

புரியாத‌ ம‌ர‌ண‌மும் பாச‌மும்

ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையிலிருந்த‌
தாத்தாவிற்கு

நிறைவேறாத‌ ஆசையிருப்பதாக‌

வாழ்ந்த‌ ம‌ண்ணையும்
அணிந்த‌ பொண்ணையும்
இழைத்து ஊட்டினார்க‌ள்

அப்பொழுதும் பிரியாத‌
ஆவியினால்

பெண்ணாசையாக‌ இருக்க‌லாமென்று
வாழ்விழ‌ந்த‌ பெண்ணொருத்தியை
முத்த‌மிட‌ச் சொன்னார்க‌ள்

அப்பொழுதும் பிரியாத‌
ஆவியினால்
ச‌ட‌ங்குக‌ள் தொட‌ர‌...

க‌டைசியாக‌
நான் பாலுட்ட‌
பிரிந்து போன‌து ஆவி

அருகிலிருந்த‌ கிழவி
ஒருத்தி சொன்னாள்
அம்புட்டு பாச‌ம் பேர‌ன் மீது

குற்ற‌ உண‌ர்வில்
நான் நிற்க ............

க‌டைசி வ‌ரை புரிய‌வில்லை
தாத்தாவின் ம‌ர‌ண‌மும் பாச‌மும்

Saturday, September 18, 2010

ஆட்கொல்லப்படுதல்


உறக்கம் தொலைத்த இரவில்
நினைவுகள் அசைகிறது

Friday, December 11, 2009

பயணம்


குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்

குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை

நானும் அதன்
வழியில்
செல்லவில்லை

பயணம் மட்டும்
தொடர்கிறது...........

இலக்கேதுமில்லாமல்

Wednesday, December 9, 2009

Thursday, December 27, 2007

Thursday, December 13, 2007

கவிக்குயில்

என்னவளுக்காக தான்
வலை விரித்தேன்
ஆனால்
கவிக்குயில் சிக்கும் என்று
தெரியாது


கா.சரன்

Saturday, September 8, 2007

அதிசயம்


ஈரிதழ் பூவடீ
நீ
என் நாவிதழ்
சுவைக்கும் போதெல்லாம்
தேன் வார்க்குதடீ
கா.சரன்